பல்ப் வாங்குறது விஜயாவுக்கு ரொம்ப பழக்கமான விஷயம்… ஆனா அதுக்குனு இவ்வளோவா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா மற்றும் முத்து ரூமில் உள்ளனர். கல்யாண நாள் கூட நியாபகம் இல்லாமல் இருக்கும் முத்து மீது கோபப்படுகிறார். எனக்கு நான் வாங்கி கொடுத்த தாலி கட்டுன நாள் தான் கல்யாண நாளா நியாபகம் இருக்கு என்கிறார். இதையடுத்து இருவரும் முதலில் எங்கு பார்த்தோம் எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

மீனா முத்துவை பார்த்த இடங்களை சரியாக சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார். பின்னர் அவரை பொறுக்கி என்று சொன்னதையும் சொல்ல இப்பையும் நான் பொறுக்கி தானே எனக் கேட்க அப்போ வேற. இப்போ எனக்கு பிடிச்ச புருஷன் என்கிறார் மீனா. முதல் கல்யாண நாளை ஓட்டி மீனாவின் அம்மா அவருக்கு சீர் கொண்டு வந்து தருகிறார். இதை பார்க்கும் விஜயா, என்ன சீரு வைர நகையா கொண்டு வந்து இருக்கீங்க என நக்கல் செய்கிறார்.

இதையும் படிங்க: இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..

அப்போ ஸ்ருதி வெளியே வந்து அன்னைக்கு எடுத்துட்டு வந்த முறுக்கு எடுத்துட்டு வந்து இருக்கீங்களா எனக் கேட்க இருப்பதாக இந்திரா கொடுக்கிறார். இதெல்லாம் சாப்பிடாதம்மா என விஜயா கூற கடன் வாங்கி சாப்பிடுறதை விட இது நல்லது என்கிறார். ரோகிணியை நலம் விசாரிக்கும் இந்திரா, உங்க அப்பா ஜெயிலில் இருக்காராமே. சிதம்பரம் அருகில் ஒரு கோவில் இருக்கு அங்க போயிட்டு வந்தா எல்லா நல்லதா நடக்கும் என்கிறார்.

இதையடுத்து விஜயா எல்லா விஷயத்தினையும் உங்க அம்மாகிட்ட சொல்றீயா என்கிறார். இதையடுத்து முத்து வர சீர் வைத்து கொடுக்கிறார். இதெல்லாம் எதுக்கு அத்தை? நான் உங்களை என் அம்மாவா தான் பார்க்கிறேன் என முத்து பல்ப் கொடுக்கிறார். பின்னர் அவர் கிளம்பிவிட கிச்சனில் இருக்கும் மீனாவிடம் என் விஷயங்களை நீங்க பேசாதீங்க என ரோகிணி கூற நல்லதுக்கு தானே சொன்னாங்க.

இதையும் படிங்க: கிட்டத்தட்ட 15 மணி நேரம் நிக்கனும்! ‘குக் வித் கோமாளி’ தாமுவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

அப்பா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் எங்களுக்கு நல்லா தெரியும் என மீனா பதிலடி கொடுக்கிறார். பின்னர் முத்து மற்றும் மீனா இருவரும் ரூமில் இருக்க ரோகிணி பேசியதை சொல்லி விடுவாளோ என அதை ஒட்டி கேட்கிறார் விஜயா. வெளியில் வந்து இதை கவனிக்கும் மீனா நான் அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். இந்த குடும்பத்தோட நிம்மதி எனக்கு ரொம்ப முக்கியம் என்கிறார்.

பின்னர் முத்து மீனாவுக்கு ஒரு கிப்ட் உடன் வீட்டிற்கு வருகிறார். பின்னர் அண்ணாமலை மற்றும் விஜயாவின் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கும் போது பாட்டி வந்துவிடுகிறார். அவரின் முத்து தூக்கி சுற்ற அண்ணாமலை இறக்கி விட சொல்கிறார். என்ன பாட்டி சொல்லாம வந்து இருக்கீங்க என்ன மீனா கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

 

Related Articles

Next Story