என்ன ஏமாத்தி அந்த சீனை எடுத்துட்டாங்க!..தயாரிப்பாளர் சங்கத்தில் நஸ்ரியாவிற்கு நடந்த அநீதி…
![என்ன ஏமாத்தி அந்த சீனை எடுத்துட்டாங்க!..தயாரிப்பாளர் சங்கத்தில் நஸ்ரியாவிற்கு நடந்த அநீதி… என்ன ஏமாத்தி அந்த சீனை எடுத்துட்டாங்க!..தயாரிப்பாளர் சங்கத்தில் நஸ்ரியாவிற்கு நடந்த அநீதி…](https://cinereporters.com/wp-content/uploads/2023/06/nazriya.jpg)
மலையாள சினிமாவில் இருந்து நேரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. நடிகை நஸ்ரியா அறிமுகமானதுமே தெலுங்கு மற்றும் தமிழ் என இரு சினிமா வட்டாரத்திலும் அவருக்கு எக்கச்சக்கமான ரசிக பட்டாளம் உருவானது.
குழந்தைத்தனமான அவரது முக பாவனைகளே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழில் வரிசையாக வாய்ப்புகளை பெற துவங்கினார் நஸ்ரியா. அதனை தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்தார் நஸ்ரியா.
பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும்போது மாடர்ன் உடை போட்டு நடித்தாலும் அதில் கவர்ச்சி இல்லாமல் பார்த்துக்கொள்வார் நஸ்ரியா. அவரது அனைத்து படங்களிலும் அதை பார்க்க முடியும். இந்த நிலையில் நய்யாண்டி திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கினார். தனுஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
இயக்குனர் செய்த ஊழல்:
இந்த படத்தில் நஸ்ரியாவிற்கு ஒரு இடுப்பு க்ளோஸ் அப் சீன் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நஸ்ரியாவிடம் கேட்டபோது அவர் கண்டிப்பாக முடியாது என மறுத்துவிட்டார். எனவே இயக்குனர் வேறு நடிகையை அழைத்து அவரது இடுப்பை ஷூட் செய்து படத்தில் சேர்த்துவிட்டார்.
இதனால் நஸ்ரியா இடுப்பை காட்டி நடித்துவிட்டார் என அப்போது அந்த செய்தி எங்கும் பரவியது. உடனே தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்ற நஸ்ரியா இது குறித்து இயக்குனர் மீது குற்றம் சாட்டினார். அதற்கு இயக்குனர் பதிலளிக்கும்போது எனக்கு அந்த சீன் தேவைப்பட்டது. அதனால் நஸ்ரியாவிடம் கேட்டேன். அவர் மறுத்ததால் வேறொரு பெண்ணை வைத்து எடுத்தேன். என பதிலளித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கமும் அது சரிதான் என பேசியது.
இதனால் நஸ்ரியாவிற்கு இறுதிவரை நீதி கிடைக்கவே இல்லை. பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: என்னோட இந்த நிலைமைக்கு காரணம் கேப்டன்தான்! ரோபோ யோசிச்சுதான் பேசுனீங்களா?