Connect with us
jayam

Cinema News

‘சைரன்’ சத்தம் கேட்குறதுக்குள்ள புடிங்கிடுவாங்கே போல! ஏம்பா சத்தியமா இது அந்தப் படம் இல்ல..

Siren Movie: ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சைரன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருக்கிறார். படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் பின்னணி இசையை சாம் சிஎஸ் மேற்கொண்டிருக்கிறார். மேலும் சைரன் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறு வயதில் திருமணம்! பாடகி சுஜாதா வாழ்க்கையில் நடந்த விபரீதம்.. இந்த சிரிப்பிற்குள் இத்தனை சோகங்களா

மேலும் ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதன் முதலாக ஜெயம் ரவி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதோடு படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனம் பெற்றது. தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யாததால் சைரன் படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால் அந்த நம்பிக்கையிலும் வேட்டு வைக்கும் விதமாக இணையத்தில் சைரன் படத்தை பற்றி ஒரு விமர்சனம் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: ஈஸ்வரியிடம் சரண்டரான பாக்கியா… சண்டை இழுத்துவிடும் கோபி… ஒரு ஆப்பை பார்சல் பண்ணுங்கப்பா…

அதாவது டிரெய்லரை பார்த்ததுமே ரசிகர்கள் இது கைதி படத்தை போன்ற சில சாயல்கள் இருப்பதாக கூறி வந்தார்கள். அதற்கேற்றாற்போல ஜெயம் ரவி லுங்கியில் வருவது ஜெயிலில் இருந்து வெளியே வருவதும் மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுவதும் கைதி படத்தின் சில சீன்களை காப்பி அடித்தாற் போலயே இருந்தது.

இதை பற்றி சைரன் பட இயக்குனர் அந்தோணி பாக்யராஜிடமே கேட்ட போது ‘கைதி பட டீஸர் வெளியானதுமே எனக்கே ஷாக் ஆகிவிட்டது. ஏனெனில் கைதிக்கு முன்னாடியே சைரன் படக் கதையை நான் எழுதிவிட்டேன். அதனால் கைதியோடு சில சீன்கள் க்ளாஷ் ஆகுமோ என்ற பயமும் இருந்தது. இதை கைதி பட ரைட்டரிடமும் சொன்னேன். அப்படியெல்லாம் க்ளாஷ் ஆகாது. பார்த்துக்கலாம் என சொன்னார்’ என்று அந்தோணி பாக்யராஜ் கூறினார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் பாக்குற நீங்கதான் முட்டாள்! அப்பா இறந்தப்போ கூட விடல – அனிதா அனுபவித்த வேதனை

அதுமட்டுமில்லாமல் சைரன் படக் கதையை முன்பே நான் ரெஜிஸ்டர் செய்துவிட்டதாகவும் எனக்கு முன்னாடி கைதி படம் ரிலீஸ் ஆகிவிட்டதாகவும் ஆனால் அந்த மாதிரி எதுவும் க்ளாஷ் ஆகாது என்றும் அந்தோணி பாக்யராஜ் கூறியிருக்கிறார். மேலும் கைதியில் கார்த்தி ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிற மாதிரி காட்டியிருப்பார்கள். ஆனால் சைரன் படத்தில் ஜெயம் ரவி பரோலில் வருவதாக காட்டியிருக்கிறேன் என்றும் அந்தோணி பாக்யராஜ் கூறினார். இருந்தாலும் என்ன மாதிரியான விமர்சனம் வரும் என நாளை பார்ப்போம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top