Connect with us
sujatha

Cinema News

சிறு வயதில் திருமணம்! பாடகி சுஜாதா வாழ்க்கையில் நடந்த விபரீதம்.. இந்த சிரிப்பிற்குள் இத்தனை சோகங்களா

Singer Sujatha: இந்திய சினிமாவில் ஒரு சிறந்த பாடகியாக அறியப்படுபவர் பாடகி சுஜாதா. கிட்டத்தட்ட 4000 பாடல்களுக்கும் மேல் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என எல்லா மொழிகளிலும் இவருடைய குரல் பரவியிருக்கிறது.

தாயை போல பிள்ளை. நூலை போல சேலை என்ற பழமொழிக்கேற்ப சுஜாதாவின் மகளும் ஒரு சிறந்த பாடகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அச்சு அசல் தன் அம்மாவை ஒத்தே மகள் ஸ்வேதாவும் தோற்றத்தில் ஒன்றுபோல் இருப்பார்கள். தாய் மகள் என்று சொல்ல மாட்டார்கள். பார்ப்பதற்கு ஒரு இரட்டை குழந்தைகள் போலத்தான் இருப்பார்கள்.

இதையும் படிங்க: ஈஸ்வரியிடம் சரண்டரான பாக்கியா… சண்டை இழுத்துவிடும் கோபி… ஒரு ஆப்பை பார்சல் பண்ணுங்கப்பா…

எப்படி இந்த வயதில் ஒரு மகள் இருந்தும் சுஜாதா இன்னும் இளமையாக இருக்கிறாரே என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் சுஜாதா மிக சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய 18வது வயதிலேயே சுஜாதாவின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. சுஜாதாவின் கணவர் கிருஷ்ணா மோகன் ஒரு மருத்துவர்.

இந்த நிலையில் சுஜாதா தன் மகளை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். திருமணமாகி இரண்டு முறை சுஜாதாவிற்கு அபார்ஷன் ஆகியிருக்கிறது. அதன் பிறகே மூன்றாவது குழந்தையாக ஸ்வேதா பிறந்திருக்கிறார். ஸ்வேதா பிறந்த நேரத்தில் சுஜாதா மற்றும் அவரது கணவர் இருவரும் அவரவர் கெரியரில் மிகவும் பிஸியாக இருந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பிக்பாஸ் பாக்குற நீங்கதான் முட்டாள்! அப்பா இறந்தப்போ கூட விடல – அனிதா அனுபவித்த வேதனை

அதனால் சிறுவயதான ஸ்வேதாவுடன் அவர்கள் இருவராலும் நேரத்தை செலவழிக்க முடியாமல் போனதாம். அதை எண்ணி ஸ்வேதாவும் அவ்வப்போது வருத்தப்பட்டதும் உண்டு என சுஜாதா கூறினார். அதை எல்லாம் சேர்த்து தன்னுடைய பேத்தியான ஸ்வேதாவின் மகளை சுஜாதா மற்றும் அவரது கணவர் இருவரும்தான் பார்த்து வருகிறார்கள். ஸ்வேதா அவர் கெரியரில் இப்போது பிஸியாக இருப்பதால் மகளைப் பார்க்கும் பொறுப்பை தன் அம்மாவிடம் விட்டுவிட்டாராம் ஸ்வேதா.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top