More
Categories: Cinema News latest news

அடுத்த விக்னேஷ் சிவன் ஆயிட்டா அசிங்கம்!.. பார்ட்டி பண்ணாம வேலை பார்க்கும் வெங்கட் பிரபு…

தமிழ் சினிமாவில் ஒரு கூல் இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் ஜாலியாகவும் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் தான் அமைந்திருக்கின்றன. ஒரு பெரிய கமர்சியல் ஆன படத்தை எடுத்தார் என்றால் அது மாநாடு படம் தான். அந்தப் படம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்பதை கண்கூடாக பார்த்திருப்போம்.

தளபதி 68 தொடக்கம்

Advertising
Advertising

அதே சமயம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய வசூலை வாரி கொடுத்தது. இதை வைத்துதான் விஜயின் 68 வது படத்தை இயக்கும் பொறுப்பு வெங்கட் பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது விஜய் லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் வெங்கட் பிரபுவுடன் இணைய இருக்கிறார் விஜய்.

vijay2

இதையும் படிங்க : நோ பார்ட்டி! நோ ப்யூட்டி – தனுஷின் திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

இருந்தாலும் நீயும் படம் வெளியாகும் வரை விஜய்யின் 68வது படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரக் கூடாது என ஒரு ரூல்ஸை போட்டிருக்கிறாராம் விஜய். அதன் காரணமாகவே வெங்கட் பிரபு கப்சிப் என இருக்கிறார். தமிழ் சினிமாவில் பார்ட்டி பிரதர்ஸ் என அழைக்கப்படும் வெங்கட் பிரபு பிரேம்ஜி இந்தப் படத்தின் காரணமாக அதை எல்லாம் சிறிது நாட்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்களாம்.

விஜய்க்கு ஜோடியாக அந்த நடிகையா?

சோமர் செட்டில் கதை ஆலோசனைகளை வெங்கட் பிரபு தனது உதவியாளர்களுடன் நடத்திக் கொண்டு வருகிறாராம். கதை விவாதத்தில் எந்த ஒரு அப்டேட்டும் வெளியே போய் விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் வெங்கட் பிரபு. ஏற்கனவே படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் இப்போது கே ஜி எஃப் பட கதாநாயகி ஸ்ரீநிதி நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க : அந்த ஹீரோவை திட்டுவதற்காக வசனம் வைத்த பாக்கியராஜ்!.. அவருக்கு என்ன காண்டோ!..

எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு அப்டேட் வெளியே வந்து கொண்டே இருப்பதால் இன்னும் கவனமாக செயல்பட்டு வருகிறாராம் வெங்கட் பிரபு. இந்த நிலையில் ஏற்கனவே ஒன் லைன் கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே பண்ண வெங்கட் பிரபு அதை முழு கதையாக மாற்றுவதில் மிகவும் சிரமப்பட்டு கொண்டு வருகிறாராம். கதை ஒரு வடிவத்திற்கு வரவே இல்லையாம். சில பல சொதப்பல்கள் இருந்து கொண்டே இருக்கின்றதாம்.

vp

அதனால் ஒரு வேளை இந்த கதை விஜய்க்கு பிடிக்கவில்லை என்றால் வெளியில் இருந்து கதை வாங்கி படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் வெங்கட் பிரபு. ஆனால் இதற்கும் விஜய் சம்மதிக்க வேண்டும் அல்லவா? கிட்டத்தட்ட அஜித் விக்னேஷ் சிவன் இடையே நடந்த பிரச்சனைதான் இப்போது விஜய் வெங்கட் பிரபுவிற்கு இடையே நடந்து கொண்டிருக்கின்றது என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க : துப்பாக்கி காட்டி ஷங்கரை மிரட்டிய தயாரிப்பாளர்.. பரிதாப நிலைக்குபோய் அவரிடமே வாய்ப்பு கேட்ட சோகம்..

Published by
Rohini

Recent Posts