தோனியை நம்பி ஏமாந்து போன நடிகை!.. சோகத்தில் எப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரு பாருங்க!..

2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாஸ்டர்ஸ் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் இவானா. தொடர்ந்து மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவருக்கு 2018ம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். பாலா படத்தில் நடித்தும் பெரிதாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: சூர்யாவை பாலா ஓடவிட்டது உண்மைதான்!.. வணங்கான் தயாரிப்பாளரே உண்மையை போட்டு உடைச்சிட்டாரே!..

பட வாய்ப்பே கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சரி ஓகேன்னு சொல்லிட்டு நடித்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை.

கோலிவுட்டுக்கு வந்து தப்பு பண்ணிட்டோமோன்னு நினைச்சிட்டு இருந்த இவானாவுக்கு பிரதீப் ரங்கநாதன் மூலமாக ஜாக்பாட் அடித்தது. தனக்கு முதல் படத்தில் பெரிய நடிகைகள் கிடைக்க மாட்டார்கள் என நினைத்த பிரதீப் லவ் டுடே படத்தில் இவானாவை ஜோடியாக்கினார்.

இதையும் படிங்க: அட!.. தளபதி 69 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போறாரா?.. அவரே சொன்ன பதிலை பாருங்க!..

இருவரும் செம சூப்பராக திரையில் செட்டான நிலையில், அந்த படம் தாறுமாறாக ஓடியது. ஆனால், அதன் பின்னர் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானாவை நடிக்க வைத்த நிலையில், தோனி படத்தில் நடித்தால் வேறலெவலுக்கு சென்று விடலாம் என ஹரிஷ் கல்யாண் படத்தில் இவானா நடித்தார். ஆனால், அந்த படம் அவருக்கு படுதோல்வியை கொடுக்க அடுத்து பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது.

மதிமாறன், ஜி.வி. பிரகாஷின் கள்வன் என சிறு சிறு படங்களில் மட்டுமே தலை காட்டி வரும் இவானா தற்போது இன்ஸ்டாகிராமில் தனிமையில் வாடும் புகைப்படங்களை வெளியிட்டு, ”Me and time taking a pause….” என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

 

Related Articles

Next Story