Connect with us

Cinema News

சூர்யாவை பாலா ஓடவிட்டது உண்மைதான்!.. வணங்கான் தயாரிப்பாளரே உண்மையை போட்டு உடைச்சிட்டாரே!..

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி அருண் விஜய் அந்த படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பலரையும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. பிதாமகன் போல படம் இருக்கிறது என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

வணங்கான் கதையை பாலா சூர்யாவுக்கு சொல்லவே இல்லை என்றும் வெயிலில் 4 நாட்கள் பீச்சில் சூர்யாவை வெறுங்காலோடு பாலா ஓடவிட்டார் என்றும் சூர்யா மீது பாலா ஒரு கட்டத்தில் கை வைத்தது தான் இருவருக்கும் இடையே மோதல் வெடித்து படத்தில் இருந்து சூர்யா மொத்தமாக வெளியேற காரணம் என ஏகப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன.

இதையும் படிங்க:  அட!.. தளபதி 69 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போறாரா?.. அவரே சொன்ன பதிலை பாருங்க!..

இந்நிலையில், வணங்கான் படத்தில் இருந்து 2டி நிறுவனம் வெளியேறிய பின்னர் பாலாவுக்காக அந்த படத்தை தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தையும் வணங்கான் படத்தையும் அவர் தான் தயாரித்து வருகிறார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளன. ஆனால், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தேர்தல் தான் இடையூறாக உள்ளதாக கூறுகின்றனர். தேர்தல் முடிந்ததும் 2 படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும்.

இதையும் படிங்க: காட்ட வேண்டியதை கச்சிதமா காட்டும் சீதா ராமம் நடிகை!.. இன்னைக்கு நைட் பசங்க தூக்கம் அவ்ளோதான்!..

இந்நிலையில், சூர்யாவை பாலா அடிக்கவில்லை என்றும் ஓடவிட்டார் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் அருண் விஜய்யையும் பாலா ஓடவிட்டார். சூர்யா இப்போ இருக்க உயரம் வேறு அவர் போய் இந்த கதையில் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய் விடும் என ஒரு கட்டத்தில் நினைத்து தான் பேசி விட்டு இருவரும் ஒருமனதாக இந்த படத்தில் இருந்து விலகினர்.

அருண் விஜய்க்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோல். இந்த படம் வெளியான பின்னர் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் சினிமாவில் இருக்கு என சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top