Categories: latest news

ஜெய்சங்கரின் ஆசையை நிறைவேற்றிய மகன்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஜய்சங்கர்

தமிழ் சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் ஜெய்சங்கர். சிவாஜி , எம்ஜிஆர் என இரு ஆளுமைகள் சினிமாவை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம். அந்த நேரத்தில் ஜெய்சங்கர் எண்ட்ரி அவரின் நடிப்பு திறமை பெருமளவு பேசப்படவில்லை. ஆனால் ஒரு சிறந்த மனிதராக மக்கள் முன் அறியப்பட்டார்.

யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் முதல் ஆளாக வந்து நிற்கக் கூடியவர். தயாரிப்பாளர்களுக்கு ஒரு செல்லப்பிள்ளையாகவே மாறியவர். 1965 ஆம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் ஜெய்சங்கர். ஆனால் துரதிர்ஷ்டம் இந்தப் படம் வெளியான அதே நேரத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான எம்ஜிஆரின் எங்கவீட்டுப்பிள்ளையும் சிவாஜியின் பழநி திரைப்படமும் வெளியானது.

இதையும் படிங்க: விஜய்க்கு வாழ்க்கை கொடுத்து காணாம போயிட்டாரு! இயக்குனர் விக்ரமனின் வெற்றியும் தோல்விகளும்!..

இரு பெரும் துருவங்களுக்கிடையில் ஒரு புதுமுக நடிகர் என்றால் மக்கள் யாரை பார்ப்பார்கள்? இருந்தாலும் துணிந்து இறங்கினார் ஜெய்சங்கர். வெற்றியும் கண்டார். அறிமுகப்படத்திலேயே ஒரு நல்ல வெற்றி ஜெய்சங்கருக்கு கிடைத்தது. தொடர்ந்து, எங்க வீட்டு பெண், பஞ்சவர்ண கிளி படங்களில் நடித்தார்.

எத்தனையோ படங்களில் நடித்தாலும் யார் நீ? திரைப்படம்தான் ஜெய்சங்கர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. ஒரு சைக்காலாஜிக்கல் திரைப்படமாக இது அமைந்ததனால் பின்னாளில் பல துப்பறிவாளன் கதாபாத்திரம் உள்ள படங்களில் ஜெய்சங்கர் நடிக்க முன்னோட்டமாக அமைந்தது.

இதையும் படிங்க: கோட் சூட் போட ஆசைப்பட்டு கோட்டை விட்ட ராமராஜன்!.. பசுநேசனின் உச்சமும் வீழ்ச்சியும்!…

அவர் இருக்கிற வரைக்கும் மற்றவர்களுக்காக எதாவது உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தவர். இதையே அவருடைய மகன்களுக்கும் சொல்லி வளர்த்திருக்கிறார் போல. ஜெய்சங்கரின் மகன்களில் ஒருவரான விஜய் சங்கர் சென்னையில் பிரபல கண் மருத்துவராக இருக்கிறார். அவர் மூலம் அஜித் ஏகப்பட்டோருக்கு உதவிகளை செய்திருக்கிறார்.

விஜய் சங்கரின் பணிக்காலம் 25 வருடங்கள் ஆகிவிட்டதாம். இதுவரைக்கும் இலவசமாக பல ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறாராம். இது அப்பாவின் கனவு என்றும் விஜய் சங்கர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கடும் அப்செட்டில் விஜய்! பூஜை போடுறதுக்கு முன்னாடியே தளபதி 69ல் நடந்த அக்கப்போரு

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago