Connect with us
எம்.ஜி.ஆர் மனைவி

Cinema History

எம்.ஜி.ஆருக்கு திருமணம் ஒப்பந்தம் போட்ட மாமா… ஆத்திரத்தில் கத்திய ஜானகி…

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், அவரின் இரண்டாவது மனைவி ஜானகி திருமணத்தில் நடைபெற்ற ஒரு காரசாரமான சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமா பல ஆண்டுகளை தாண்டி இன்று வேறு லெவலில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இருந்தும், சிறந்த நடிகர் என யாரிடமாவது கேட்டால் அதற்கு அந்த பட்டியலில் எம்.ஜி.ஆர் பெயர் இல்லாமல் இருக்காது. அப்படிப்பட்டவர் வாழ்க்கையிலும், ஏகப்பட்ட அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து இருக்கிறது. சொல்லப்போனால் அவரின் நிஜ ஹீரோயிசம் கூட அந்த சமயத்தில் வெளிப்பட்டு விடுமாம். அப்படி தான் அமைந்தது அவரின் திருமண வாழ்க்கை.

ஒரு நாள் எம்.ஜி.ஆர், தியாகி என்ற படத்தினை பார்த்திருக்கிறார். அதில் நடிக்கும் நடிகையை பார்க்கும் போது அவருக்கு சொல்ல முடியாது ஈர்ப்பு வந்திருக்கிறது. எங்கையோ பார்த்த முகம் என்ற குழப்பம் வேறு. ஆனால் எங்கு பார்த்தால் எனக் கூற முடியவில்லை. தொடர்ந்து யோசித்து கொண்டே இருந்திருக்கிறார். அப்போது தான் தனது முதல் மனைவி பார்கவியினை பார்த்தது போலவே இருக்கிறார் அந்த நடிகை. அவர் வேறு அல்ல ஜானகி தான். இருவரின் உயரம், உடல் அமைப்பு ஏன் முக சாயல் கூட ஒத்ததாக இருக்கிறது.

பின்னர், எம்.ஜி.ஆரின் அடுத்த படத்தில் வி.என்.ஜானகியும் ராஜமுத்தி என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். பின்னர் அது காதலாக மாறியது. இது திருமணம் என்னும் நிலையை அடைய தான் எண்ணற்ற போராட்டங்களை சந்தித்தார். ஜானகியிடமும் தனது காதலை நேரடியாகவே கூறினார். அந்த வேளையில், ஜானகியின் தாய்மாமன் நாராயணனுக்கு இவர்கள் காதலில் துளியும் விருப்பம் இல்லை. அவர் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் இருப்பதாக கூறினார்.

ஜானகி

இருவரும் நேரில் சந்தித்தனர். எம்.ஜி.ஆரிடம் ஒரு பேப்பரை கொடுத்த இதை படியுங்கள் எனக் கூறி இருக்கிறார். அதை படித்தவருக்கு செம கோபமாகி இருக்கிறது. காரணம், அடுத்த பத்து வருடம் இருவரும் நாராயணன் கை காட்டும் படங்களில் தான் நடிக்க வேண்டும் என்பதே அது. இது அவருக்கு பெரிய பிரச்சனை, காதலிக்கும் போதே திருமணத்திற்கு பின்னர் வி.என்.ஜானகி நடிக்க கூடாது என்பதே. ஆனால் அவரையும் நடிக்க கூறியதால் கடும் கோபம் கொண்டார். அதுவும் இல்லாமல், அப்போது தான் எம்.ஜி.ஆர் தனது சினிமா வாழ்க்கையை துவங்கி இருந்தார். ஜானகி நல்ல நிலைமையில் இருந்தார். இதனால் இருவரும் திருமணம் செய்தால், ஜானகி குடும்பத்திற்கு காசு கிடைக்காமல் போகும் என்பது அவர் எண்ணமாக இருந்ததிருக்கலாம்.

இதையும் படிங்க:  ராமாபுரம் தோட்டத்தில் நடந்த திக்..திக்..சம்பவம்!.. நிலைகுலையாக இருந்த எம்.ஜி.ஆர்!.

தொடர்ந்து, சத்தம் போடாதீங்க என்றாராம் ஜானகி. இது எம்.ஜி.ஆரை இன்னும் சீண்டி விட்டதாம். ஆனால், இது கல்யாணத்திற்கு பிரச்சனையாக வந்து விடும். தயவு செய்து, கையெழுத்து போடுங்கள் என கெஞ்சி இருக்கிறார். இருந்தும், ஏற்கனவே கோவத்தில் இருந்த எம்.ஜி.ஆர் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறி எழுந்து சென்று விட்டாராம். இதன் பின்னரும் ஏக கலவரத்திற்கு இடையே தான் எம்.ஜி.ஆரை கரம் பிடித்தார் ஜானகி.

google news
Continue Reading

More in Cinema History

To Top