விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு தணிக்கை அதிகாரிகள் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் எனவும் சென்சார் போர்டு சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது வரை இந்த வழக்கில் தீர்வு எட்டப்படவில்லை.. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி பயணித்தது. தற்போது இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி பி.டி ஆஷாவை விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எப்போது இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என்பது தெரியாமல் இருக்கிறது. எனவே ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பதும் தெரியாமல் இருக்கிறது..
இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. ஜனநாயகன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது.. மேலும் மறுதணிக்கைக்கும் விண்ணப்பித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பொதுவாக 20 நாட்களுக்குள் அதிகாரிகள் படம் பார்த்து மறுத்தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் இது ஏற்கனவே காலதாமதம் ஆகிவிட்டதால் விரைவில் புதிய அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை பார்த்து அவர்களின் கருத்தை சொல்வார்கள் என தெரிகிறது..
ராணுவம் தொடர்பான ஒரு சின்னத்தை இந்த படத்தில் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் தணிக்கை வாரியம் செல்லும் குற்றச்சாட்டு. எனவே இந்த முறை ஜனநாயகன் படத்தை ஒரு ராணுவ அதிகாரியும் பார்க்கவிருக்கிறாராம். அவர் பார்த்துவிட்டு என்ன கருத்து சொல்கிறாரோ அதை செய்துவிட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படும் என தெரிகிறது..
வருகிற 19 அல்லது 20ஆம் தேதி இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கிற முடிவில் தயாரிப்பாளர் இருக்கிறார். எனவே எல்லாம் சரியாக நடந்தால் ஜனநாயகன் திரைப்படம் பிப்ரவரி 19 அல்லது 20ம் தேதியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது…





