Connect with us
janani

latest news

வாயே திறக்காத ஜனனி! அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்த ‘எதிர்நீச்சல்’ சீரியல்

சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கு  நாளுக்கு நாள் ஃபேன்ஸ் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏதாவது ஒரு விதத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இன்று வெளியான எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியாவால் பல திருப்பு முனைகள் ஏற்படும் என தெரிகிறது. அதாவது காரிலிருந்து இறங்கும் கதிர் கடும் அப்செட்டில் இருக்கிறார். அதை பார்த்த ரேணுகா அவரை பார்க்க போனவர்கள் பயந்துட்டு இப்படி ஓடி வந்துராங்க போல என கூறுகிறார்.

இதையும் படிங்க : ஜெயலலிதாவுக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி தெரியுமா?!.. அட ஆச்சர்யமா இருக்கே!..

அதை கேட்டு நந்தினி எப்பொழுதும் போல அவரின் நக்கல் தொணியில் சிரிக்கிறார். இதனால் கடுப்பான கதிர் உள்ளே சென்று வருகிறார். உடனே சக்தி வர அவரிடம் ரேணுகா அவரை பார்த்தீயா என கேட்கிறார்.

அதற்கு சக்தி  ‘எங்க அவரை பத்தி கேட்டாலே யாரும் தெரியலனு தான் சொல்றாங்க’ என்று அந்த புரோமோ முடிகிறது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி மற்றும் ஜீவாநந்தம் பற்றி எதுவுமே அந்த வீடியோவில் காட்டப்படவில்லை.

மேலும் சமீபகாலமாகவே ஜனனி மற்றும் சக்தி இவர்களின் கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாமலே போய் கொண்டிருக்கிறது. அதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்தார்கள். ஆனால் இன்று வெளியான புரோமோ வீடியோவில் சக்தியின் வாய்ஸ் கேட்க தொடங்கியது.

இதையும் படிங்க :ஏவிஎம் நிறுவனத்துடன் மோதலா?… ‘அன்பே வா’ படத்துக்கு பின் ஏன் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை?…

இனி போக போக புது புது திருப்பு முனைகள் ஏற்படும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் எல்லாம் இன்று ஒளிபரப்பாக உள்ள தொடரில் நடக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in latest news

To Top