Connect with us
jayallaitha

Cinema History

படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரிடம் கண்ணாமூச்சி ஆடிய ஜெயலலிதா – பதறிய இயக்குனர்

சந்தர்ப்ப மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் ஜெயலலிதா. அதனால் பல வருடங்கள் அவரிடம் விளையாட்டுத்தனம் இருந்தது. இரண்டாவது படமே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார். அந்த படம் ஹிட் அடித்தது. அதோடு, எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறியது. எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகைகளில் ஜெயலலிதா முக்கியமானார்.

அதோடு, எம்.ஜி. ஆருடன் நடிக்கும்போதே அவர் விளையாட்டுத்தனமான பல விஷயங்களை செய்துள்ளார். இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சொல்லலாம். அதில் ஒன்றைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.

mgr

கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த திரைப்படம் அடிமைப்பெண். பொதுவாக எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்கு வந்தால் அவருடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் என எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்வார்கள். ஜெயலலிதாவும் அவருக்கு வணக்கம் வைப்பார். அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா நடித்துக்கொண்டிருந்த போது எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு இடத்திற்கு வந்துள்ளார்.

இன்றைக்கு அவருக்கு இயக்குனர் வணக்கம் சொல்ல கூடாது என நினைத்து ஜெயலலிதா அப்படத்தின் இயக்குனர் சங்கரிடம் ‘என்னை மட்டுமே பாருங்க வேற எங்கயும் பார்க்காதீங்க’ என சொல்ல சங்கரும் அப்படியே செய்தார். எம்.ஜி.ஆரின் பார்வையில் ஜெயலலிதாவின் முகம் மறைக்கப்பட்டு சங்கரின் முதுகு மட்டுமே தெரிந்தது. அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே ஜெயலலிதா சிரிக்க ‘இந்த பக்கம் யார் போனது?’ என சங்கர் கேட்க ‘எல்லாம் உங்க ஹீரோதான். தினமும் அவருக்கு வணக்கம் வைக்கணுமா?.. இன்னைக்கு ஒரு நாள் சார் வணக்கம் வாங்காம போகட்டுமே’ என சொல்லி சிரிக்க சங்கருக்கு தூக்கி வாரிப்போட்டது.

mgr

‘என்னம்மா இப்படி பண்ணிட்ட.. நானும் அவர பாக்காம விட்டுட்டேன்’ என பதறியெழுந்து எம்.ஜி.ஆரிடம் சென்று நடந்ததை சொல்ல எம்.ஜி.ஆரோ கூலாக ‘எனக்கு எல்லாம் தெரியும். அம்மு (ஜெ.வை அவர் அப்படித்தான் அழைப்பார்) விளையாட்டு பொண்ணு. அது கூட சேர்ந்து நீங்களும் சின்ன பையன் ஆகாம இருந்தா சரி’ என சொல்லி சிரித்தாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top