More
Categories: Cinema News latest news

இளையராஜாவை பார்த்து மிரண்டு போன ஜெயலலிதா! அம்மாவுக்கே ஜெர்க் காட்டிய இசைஞானி

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை துறையில் பெரிய ஜாம்பவானாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவருடைய இசையை பின்பற்றி பல இசைக்கலைஞர்கள் இன்று வரை அவர்கள் சினிமா பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாக இளையராஜாவை பற்றிய பல செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதுவும் கூலி படத்தில் தன்னுடைய இசையை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீது புகார் ஒன்றை கொடுத்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட வழக்கு தான் இப்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. அதில் ஒரு சில பிரபலங்கள் இசை உட்பட மொத்த படமும் தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: பிரபலங்களை அசிங்கப்படுத்திய பயில்வான் ரங்கநாதன்… அவர் மகளால் மூக்குடைப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

ஒரு சில பிரபலங்கள் அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது மிகப்பெரிய தவறு என்றும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இளையராஜாவை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது இளையராஜாவை கௌரவப்படுத்தும் வகையில் ஒடிசா மாநிலத்தின் அப்போதைய முதல்வர் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தாராம்.

அவரை எப்படியாவது வரவழைக்க வேண்டும் என்றால் அது மாணிக்கம் நாராயணனால்தான் முடியும் என மாணிக்கம் நாராயணனையும் சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கிறார்கள். அந்த விழாவிற்கு பட்நாயக் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். அப்போது மாஸ்ட்ரோ இளையராஜா என அவர் பெயரை அறிவித்ததும் அங்கு கூடியிருந்த ஒட்டு மொத்த ஒரிசா மக்களும் ஆரவாரத்தில் கைதட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்களாம்.

இதையும் படிங்க: ராஜாவால் மியூசிக் டைரக்டர் ஆனேன்… திட்டினாலும் அவர்தான் என் குரு!.. சொன்னது யார் தெரியுமா?..

அதை பார்த்ததும் ஜெயலலிதா வாய் அடைத்துப் போனாராம். மேலும் மேடைக்கு இளையராஜா வரும்போது இளையராஜாவை பார்த்து ஜெயலலிதா அந்த சத்தத்தை நோக்கி தன் கையை நீட்டி  ‘பாருங்க ஆரவாரத்தை’ என மெய்சிலிர்த்து போனாராம் ஜெயலலிதா. இதை மாணிக்கம் நாராயணன் அந்த பேட்டியில் இளையராஜாவை பார்த்து ஜெயலலிதாவே மிரண்டு போன சம்பவம் தெரியுமா உங்களுக்கு என இந்த தகவலை கூறினார்.

Published by
Rohini

Recent Posts