Connect with us
jayam

Cinema News

மொத்த பணத்தையும் சுருட்டி போயஸ் கார்டனில் வீடு! தயாரிப்பாளரை இளிச்சவாயாக்கி சுகம் காணும் ஜெயம்ரவி

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கும் ஜெயம் ரவி அடுத்ததாக ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறாராம் ஜெயம் ரவி.

ஆனால் முதலில் நித்யா மேனன் அவருடைய காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகின்றதாம். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த நிலையில் ஜெயம் ரவியை பற்றி தயாரிப்பாளர் கவுன்சிலில் ஒரு பெரிய புகார் ஒன்று அளிக்கப்பட இருக்கின்றதாம்.

இதையும் படிங்க : ஜெய்லர் படத்தில் ரஜினிகாந்திடம் இதை கவனித்தீர்களா? இதான் உண்மையான காரணமா?

ஸ்கிரீன் சீன் என்ற திரைப்பட நிறுவனம் மூலமாக தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து தருவதாக ஜெயம் ரவி ஒட்டுமொத்தமாக அதற்கான தொகையை பெற்றிருக்கிறார். அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு போயஸ் கார்டனில் ஒரு பங்களாவே வாங்கி இருக்கிறாராம்.

ஆனால் அவர் சொன்னது போல அந்த நிறுவனத்திற்கு படம் பண்ணாமல் சை, இறைவன் என அடுத்தடுத்து வேறு ஒரு கம்பெனிக்காக நடித்துக் கொண்டே இருக்கிறாராம். பொன்னியின் செல்வனில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஸ்கிரீன் சீன் நிறுவனர் அது மல்டி ஸ்டார் படம் தானே? அதை முடித்துவிட்டு வாருங்கள் என்று தான் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க : யார் வீட்டு காசு? தயாரிப்பாளர் தலையில் துண்ட போட வைத்த சங்கர்! 10 படம் எடுத்துடலாமே?

ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு ஹீரோவாக மற்ற நிறுவனத்திற்கு கால்சீட்டை கொடுத்திருக்கிறாராம். இதனால் அந்த ஸ்கிரீன் சீன் கம்பெனி நிறுவனம் ஜெயம் ரவியின் மீது பெரிய அதிருப்தியில் இருக்கின்றதாம். தயாரிப்பாளர் கவுன்சிலிலும் ஜெயம் ரவி மீது புகார் அளிக்க போவதாகவும் இந்த பட நிறுவனம் கூறி வருகின்றதாம்.

ஆனால் இதை பற்றியெல்லாம் ஜெயம் ரவியிடம் கேட்டால் ‘அப்படியா? இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் ’ என நக்கல் தனத்துடன் நையாண்டியாக பதில் கூறினாராம். இதை பார்த்த ஒரு சில பேர் இந்த நக்கல் தனத்தை பணம் வாங்கியவர் முன்பு பண்ண சொல்லுங்கள் பார்ப்போம், அவரிடன் கஷ்டம் அப்பொழுதுதான் தெரியும் என புலம்பி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top