பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களை புக் செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு அகிலன், பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் என தொடர்ந்து 3 படங்களை ரிலீஸ் செய்துள்ளார். மேலும், அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷ் உடன் அவர் இணைந்து நடித்துள்ள சைரன் படமும் வெளியாகிறது.
இதையும் படிங்க: சிவகுமாரை இழுத்து சந்தி சிரிக்க வைத்த பிரபல இயக்குநர்!.. எல்லாத்துக்கும் ஞானவேல் தான் காரணம்!..
மேலும், ஜீனி, பிரதர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி படத்திலும் அவர் நடிக்கப் போவதாகவும் அதற்கான அப்டேட்டை தான் விரைவில் ரெட் ஜெயண்ட் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்க உள்ள இந்த படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம். இப்படி பிரம்மாண்ட கலைஞர்களின் பட்டியல் அணிவகுக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாய் கிழவி நித்யா மேனன் நடிக்கப் போவதாகவும் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: அச்சச்சோ!.. யாஷிகா ஆனந்த்தை தொடர்ந்து ஜி.பி. முத்து காரும் விபத்துல சிக்கிடுச்சாம்.. என்ன ஆச்சு?
விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தவிர அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
அறிமுக இயக்குனர்களுக்கு…
Actress Nagma:…
பராசக்தி திரைப்படம்…
Mohan Kamal:…
நகைச்சுவை ஜாம்பவான்…