ஸ்மைலி பந்தை வைத்து இப்படியும் பயமுறுத்த முடியுமா?.. திகிலை கிளப்பிய ஜெயம் ரவியின் இறைவன் சீன்!..

இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, மற்றும் விஸ்வரூபம் வில்லன் ராகுல் போஸ் பலர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் இந்த வாரம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ராட்சசன் பட பாணியில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ளது இறைவன் திரைப்படம். பெண்களை கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனான ராகுல் போஸை போலீஸ்காரர் ஆன ஜெயம் ரவி எப்படி பிடிக்க போகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டிரைலர் மற்றும் காட்சிகள் மூலமாக தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: இந்த ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டா சோலி முடிஞ்சது!.. ஓவர் ஆட்டம் போடும் சிவகார்த்திகேயன்..

படத்தின் ரிலீசை முன்னிட்டு தற்போது வெளியான ஒரு பிரத்யேக காட்சி ரசிகர்களை வெகுவாக மிரட்டி வருகிறது. பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்லும் ஒரு பெண் வழியில் தனது ஸ்கூட்டி நின்றுவிட ஆட்டோவை பிடித்து செல்கிறார். ஆனால் அவர் ஆட்டோவில் கடத்தப்படுகிறார். அதன் பின்னர் கட்டிப் போடப்பட்ட நிலையில் நடிகர் ஜெயம்ரவி இருக்கும் நிலையில் ஸ்மைலி பந்துகள் அவரை நோக்கி வீசப்படுகிறது.

வில்லனின் மிரட்டலான குரல் ஜெயம் ரவியை சூடேற்ற அவர் தனது கட்டை அவிழ்த்துக் கொண்டு வில்லனை கொல்வதற்காக துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஓடிவர அங்கே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கண்களில் ஸ்மைலி பந்துகளை வைத்து சொருகி அவளது வயிற்றில் உள்ள செல்போன் மூலமாக வில்லன் பேசுவதாகவும் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தியேட்டரில் சந்திப்பதாகவும் பணத்திற்கான புரொமோஷன் காட்சியாக இப்படி ஒரு பயமுறுத்தும் காட்சியை இறைவன் பட குழு வெளியிட்டு புரோமோஷன் செய்து வருகிறது.

இதையும் படிங்க: தலைவரோட அடுத்த படக்கதை இப்படித்தான் இருக்குமாம்!… மனைவிக்கு ஆப்பு அடிக்காம இருந்தா சரிதான்…

ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், படம் மிகவும் பயங்கரமாக இருக்கும் என தெரிகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு திரில்லிங்கான பின்னணி இசையை கொடுத்திருப்பது இந்த ஒரு காட்சியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.

 

Related Articles

Next Story