ஆபரேஷனே வேணாம்… மனோஜ் சொல்லியும் நடந்தது ஏன்? சித்தப்பா சொன்ன அதிர்ச்சி தகவல்!

jayaraj manoj
Manoj bharathiraja: பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ், மனோஜ் கடைசி காலகட்டத்தில் என்னென்ன பேசினார்? ஆபரேஷன் குறித்து என்ன சொன்னார் என சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
பாரதிராஜா வீட்டுல மனோஜ் போட்டாவைப் பார்த்துக்கிட்டே இருக்காரு. இன்னும் என் மகனோட முகத்தைப் பார்க்கணும் பார்க்கணும்னு தான் சொல்லிக்கிட்டு இருக்காராம். மகன்மேல அவ்ளோ பாசம் வச்சிருந்தாரு. மனோஜ் எங்காவது சூட்டிங் போனா கூட இடையில ப்ரீ டைம் கிடைச்சா வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பார்த்துருவான். பிள்ளைங்க மேல அவ்ளோ பாசம் வச்சிருந்தான்.
மனைவி, 2 குழந்தைகளும் நிலைகொள்ளாம இருக்காங்க. நான் இருக்குறேன்னு அவங்களை ஆறுதல் படுத்துனேன். ஆனா பாரதிராஜாவை சமாதானப்படுத்துறதுக்கு என்னால முடியல. மூணு நாளும் அவரைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு ரொம்ப உழன்று போய் இருக்காரு. ஒரு மனிதனுக்கு இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது. இதயப்பிரச்சனை மட்டும்தான் இருந்தது.
ஆனா சினிமாவுல பிரச்சனை இருந்ததுன்னு சொல்றாங்க. ஆனா எங்கிட்ட மறைச்சிட்டான். இதய அறுவை சிகிச்சையே வேணாம்னு தான் மனோஜ் சொன்னான். நாங்க தான் குடும்பம், குழந்தைங்க எல்லாம் இருக்கு. பண்ணினா நல்லதுதான். அப்புறம் அடைப்பை எல்லாம் எடுத்துட்டா பிரச்சனையே இருக்காதுன்னு பண்ணச் சொன்னோம். எனக்கு பைபாஸ் பண்ணி 21 வருஷம் ஆச்சு. நல்லாதான் இருக்கேன். டாக்டர் கூட நீங்க 30 வருஷத்துக்கு இளமையா ஆகிட்டீங்கன்னு சொன்னார்.
பைபாஸ் பண்ணினதைக் கூட யாருக்கும் சங்கடப்படுவாங்கன்னு சொல்லவே இல்லை. ஆபரேஷனுக்குப் பின்னாடி சீராகிடுச்சுன்னாங்க. அப்புறம் திடீர்னு கொலாப்ஸ் ஆன மாதிரி ஆகிடுச்சு. எங்கிட்ட நல்லா பேசுவான்.
'சித்தப்பு, நாம எல்லாம் ஒரே ஏஜ் குரூப்தானே வாங்க கிளம்பலாம்'னு ஜாலியா சிரிச்சிப் பேசுவான். ரொம்ப இழந்துட்டோம். நம்பி நம்பி இழந்துட்டோம். ஆரம்பத்துலயே கொஞ்சம் அலார்ட்டா இருந்துருக்கணும். என் மேலயும் கொஞ்சம் தவறு இருக்கு. எந்தத் துயரமான சம்பவமா இருந்தாலும் அந்த இடத்துல சந்தோஷப்படுத்திட்டு வந்துடுவான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.