Categories: latest news

நானும் சூர்யாவும் ரெடி.. பெண் இயக்குனர்களுக்கு தில்லாக சவால் விட்ட ஜோதிகா

Actress Jyothika: தமிழ் சினிமாவில் 2000 ஆண்டுகளில் ஒரு டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா தொடர்ந்து தமிழ் நாட்டின் கனவுக்கன்னியாக மாறினார். அவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம். அந்தப் படத்தில் துருதுருவென நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் ஜோதிகா.

நடிப்பில் எப்போதுமே ஒரு சுறுசுறுப்பு இருக்கும். ஆரம்பகாலங்களில் தமிழ் அறவே பேச தெரியாமல் சிரமப்பட்ட ஜோதிகா இப்போது பிச்சு உதறுகிறார். தமிழ் நாட்டின் செல்ல மருமகளாகவே மாறினார். திருமணம், குழந்தைகள் , குடும்பம் என தன் முழு நேரத்தையும் செலவழித்து வந்த ஜோதிகா இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் நழுவ விட்ட முக்கிய படங்கள்!.. அந்த கதையில் நடிச்சதால வாழ்க்கையே மாறிய பிரபலங்கள்…

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், ஹிந்தியிலும் பிஸியாக இருக்கிறார். ஹிந்தியில் படங்களில் நடிக்க ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் குடும்பத்துடன் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். சூர்யாவையும் ஹிந்தியில் அறிமுகப்படுத்த உள்ளார்.

பல படங்களை தயாரிக்கவும் முனைப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில் ஜோதிகாவின் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 16 வருடங்களில் ரொமாண்டிக் என்ற பெயரில் படங்களில் வெறும் சபலம் மட்டுமே இருக்கிறது. ரொமான்ஸ் என்பதே இல்லை. என்னையும் சூர்யாவையும் வைத்து ரொமாண்டிக் படம் எடுக்க பல பெண் இயக்குனர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடியாங்க.. ஓடியாங்க!.. ஊர்வசி நடித்து மிரட்டிய ஜே பேபி!.. எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..

சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த அனைத்து படங்களுமே ரொமாண்டிக் படங்களாகவே அமைந்திருக்கும். அதில் ஜோதிகா சொல்வதை போன்று பார்க்கும் போது சபலத்தை தூண்டாது. அந்த மாதிரியான கதைகள் இப்போது குறைந்து வருகின்றது என கூறியிருக்கிறார்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago