More
Read more!
Categories: Cinema News latest news

நடிகைகளுக்கு 50 – 50!.. கணவர் சூர்யா பற்றி ஓபனா சொன்ன ஜோதிகா.. என்ன மேட்டர் தெரியுமா?..

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்தில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ஜோ பேபி இயக்கிய அந்த படத்தில் மம்மூட்டி ஓரினச் சேர்க்கையாளராக நடித்து மிரட்டி உள்ளார். நடிகை ஜோதிகாவின் கதாபாத்திரமும் செம போல்டாக இருந்த நிலையில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜோதிகா தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முன்னணி இயக்குனர்கள் முக்கியத்துவம் அளிக்க மறுக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டை வைத்திருந்தார். ஆனால் சூர்யா நடிக்கும் படங்களில் ஹீரோயின்களுக்கு சரிசம அந்தஸ்தை வழங்கி வருகிறார் என்று பேசியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: காப்பி அடிச்சாதான் 600 கோடி பாக்ஸ் ஆபிஸ் வருமா!.. அனிமல் படத்தின் அந்த சீனும் காப்பி தான்!..

ஜெய்பீம் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தை விட லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது என்றும் சூரரைப் போற்று படத்தில் மாறன் கதாபாத்திரத்துக்கு 50 – 50 ஆக பொம்மி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட நிலையில்தான் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது எனக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் நடிகை லைலா நடித்த பல நல்ல திரைப்படங்கள் சூர்யாவுடன் அவர் நடித்ததாக தான் இருக்கும் என்றும் ஜோதிகா கூறியுள்ளார்.

தனது கணவரை பெருமைப்படுத்தி ஜோதிகா பேசிய நிலையில், மற்ற நடிகர்கள் எல்லாம் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இல்லையா என ஏகப்பட்ட தோள்களும் குவிந்து வருகின்றன. சூரரைப் போற்று படத்துக்கு எப்படி தேசிய விருது வந்தது என்றும் தெரியும். ஜெய்பீம் படத்துக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்றும் தெரியும் என்றும் பின்னர் உங்களுடன் ஏன் சூர்யா இப்போதெல்லாம் நடிப்பதில்லை என்றும் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி நடிகை ஜோதிகாவை கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரியல் லேடி சூப்பர்ஸ்டார் வந்ததும்!.. பம்ம ஆரம்பித்தாரா நயன்தாரா.. அந்த பயம் இருக்கட்டும்!..

Published by
Saranya M

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

9 hours ago