Connect with us
kamal

Cinema History

பதினாறு வயதினிலே படம் நடிக்கும்போது காதல் வசப்பட்ட கமல்!. நடிகர் சொன்ன சீக்ரெட்…

நடிகர், பத்திரிக்கையாளர், பத்திரிக்கை தொடர்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், ஊடகவியலாளர் என பல முகங்களை கொண்டவர்தான் சித்ரா லட்சுமணன். இவர் சமீபத்தில் ஊடகத்தில் பேசும் கமலுடனான அவரின் நட்பு, அனுபவம் மற்றும் பதினாறு வயதினிலே படம் தொடர்பாக நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

1975ம் வருடம் சுமார் 10 படங்களில் நடித்து முடித்திருந்தார் கமல்ஹாசன். அதில் அந்தரங்கம், ஆயிரத்தில் ஒருத்தி, சினிமா பைத்தியம், மாலை சூடவா போன்ற படங்களுக்கு நான்தான் பத்திரிக்கை தொடர்பாளனாக இருந்தேன். இதில் ஆயிரத்தில் ஒருத்தி படத்தில் கமலின் சம்பளம் தொடர்பாகவும் பேசி அவரை ஒப்பந்தம் செய்ததும் நான்தான்.

இதையும் படிங்க: இந்த படத்துல கமல் வேண்டாம்!.. தூக்கி போடுங்க!.. இயக்குனருக்கு வந்த நெருக்கடி…

அந்த படத்தில் கமல் வாங்கிய சம்பளம் 15 ஆயிரம். 1976ம் வருடம் கமல் நடிப்பில் வெளிவந்த படம்தான் அதிர்ஷ்டம் அழைக்கிறது. அந்த படத்தை இயக்கியவர் ஜெகன்நாதன். அவரிடம் உதவியாளாராக இருந்தவர்தான் பாரதிராஜா. அந்த படம் உருவானபோதே இதுதான் என் கடைசிப்படம். இனிமேல் இயக்கம்தான் என முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.

chithra

அப்படி அவர் உருவாக்கிய படம்தான் பதினாறு வயதினிலே. கமலுக்கு பாரதிராஜா ஏற்கனவே அறிமுகம். அவரை பொறுத்தவரை புதிதாக வரும் திறமைசாலிகளை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார். எனவே, அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் நடிக்க கமல் கேட்ட சம்பளம் 30 ஆயிரம். அதை கொடுக்க பாரதிராஜாவும், தயாரிப்பாளரும் ஒப்புகொண்டார்கள்.

இதையும் படிங்க: கமல்-ஹெச்.வினோத் படத்தின் கதை முக்கிய பிரபலத்தின் பயோபிக்காம்!.. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்…

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே நடந்தது. எனவே, ரயிலில் அங்கு சென்று ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். இப்போது போல அப்போது செல்போன் வசதி இல்லை. நாங்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து அரை மணி நேரம் நடந்து சென்று ட்ரங்கால் பேச வேண்டும். தொலைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். கமலும் அப்படி காத்திருப்பார்.

vani

அப்போது ஹிந்தி நடிகை ரேகாவை கமல் காதலிப்பதாக வதந்தி இருந்தது. எனவே, நானும் அவரிடம் கமல்தான் பேசுகிறார் என நினைத்தேன். ஆனால், ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் அவருடன் ஒரு பாடலில் நடித்த வாணி கணபதியைத்தான் காதலிக்கிறார் என கமல் என்னிடம் சொன்னார். பதினாறு வயதினிலே படம் வெளியான அடுத்த வரும் அவர் வாணி கணபதியை திருமணமும் செய்து கொண்டார்’ என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: இரவு 12 மணிக்கு கதவை தட்டிய தயாரிப்பாளர்!.. உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!. அட அந்த படமா?!..

google news
Continue Reading

More in Cinema History

To Top