More
Categories: Cinema News latest news

விருது விழாவில் ‘பல்பு’ வாங்கிய கமல்.! கொஞ்சமும் கூச்சப்படாமல் வெளியில் சொல்லிடீங்களே சார்.!

உலக நாயகன் கமல்ஹாசன் ஆரம்பம் முதலே அதாவது அவரது 5 வயது முதலே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்பின்னர் நடன இயக்குனர், எழுத்தாளர், நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை யாளராக சினிமாவில் வலம் வருகிறார்.

Advertising
Advertising

இவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் தான் இளையராஜா, ரஜினிகாந்த் போன்ற அடுத்தடுத்த ஜாம்பவான்களும் வளர தொடங்கினார். அந்த சமயம் இளையராஜாவை இவருக்கு அடையாளம் தெரியாதாம். வெகுநாட்களாக இளையராஜாவின் தம்பி கங்கை அமரனை தான் இளையராஜா என்று கமல் நினைத்து இருந்திருக்கிறார்.

இளையராஜா இசையமைத்திருந்தார் அன்னக்கிளி திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. அப்போது அந்த விருது மேடையில் கமல்ஹாசன் இருந்துள்ளார். அப்போது கங்கை அமரனை பார்த்து மேடைக்கு வருமாறு அழைத்துள்ளார் கமல்.  கங்கைஅமரன் நான் வரவில்லை என்று மறுத்துள்ளார். உடனே இளையராஜா எவ்வளவு பண்பானவர் மேடைக்கு கூட வர மறுக்கிறார் என்று பெருமையாக நினைத்து கொண்டிருக்கும் வேளையில்,

உண்மையான இளையராஜா மேடை ஏறியுள்ளார். அப்போதுதான் இவர்தான் உண்மையான இளையராஜா. நாம் நினைத்து கொண்டிருந்தது இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் என்று உண்மை கமலுக்கு புலப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் –  மறந்தும் கூட போலீஸ் ட்ரெஸ் போடாத டாப் தமிழ் ஹீரோக்கள் லிஸ்ட் இதோ..,

இதனை வெள்ளந்தியாக வெளிப்படையாக உலக நாயகன் கமல்ஹாசன் அண்மையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறினார். சாதாரணமான நபர் கூட தான் பல்பு வாங்கிய விஷயத்தை வெளியில் கூற தயங்குவர். ஆனால் இவ்வளவு பெரிய புகழ் உச்சத்தில் இருக்கும் கமல்ஹாசன் தான் இவ்வாறு தவறுதலாக புரிந்து பல்பு வாங்கியதை எந்தவித கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Published by
Manikandan

Recent Posts