கடவுளுக்கே சவால் விடலாமா கவியரசரே…? உங்க வாக்கு உங்களுக்கே பலித்து விட்டதே..!

kannadasan
கண்ணதாசன் என்றாலே பல்கலை வித்தகர்னு சொல்லலாம். கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த எழுத்தாளர்னு சொல்லிக்கொண்டே போகலாம்.
அவருடைய தயாரிப்புல ஒண்ணு ரெண்டு படங்கள்தான் லாபம். மற்ற எல்லாமே நட்டம்தான். அவர் கையை சுட்ட படங்கள்ல ஒண்ணுதான் கவலை இல்லாத மனிதன். சந்திரபாபு, பாலையா, எம்.ஆர்.ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் இசை அமைத்தனர். இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சந்திரபாபு நடித்துள்ளார்.
எம்.ஆர்.ராதா தான் பட்டையைக் கிளப்பி இருப்பார். கண்ணதாசனே இந்தப் படத்தைப் பற்றி சொல்கையில் கவலை இல்லாத மனிதனைக் கொடுத்து கவலையான மனிதன் ஆனேன்னு சொன்னாராம். இந்தப் படத்துல நான் தெய்வமா இல்லை நீ தெய்வமான்னு ஒரு பாடல். டிஆர்.மகாலிங்கம் பாடியுள்ளார். இது ஒரு வித துறவு நிலை. கவிஞருக்கு இது ரொம்பவே வரும்.
பல்லவியில் கண்ணதாசன் 'நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா..'ன்னு எழுதி இருப்பார். முதல் சரணத்தில் 'எனக்கென்று தாய் தந்தை யாருமில்லை. உழைப்பற்ற தாயாருக்கோ பேதமில்லை. பசி எடுத்தாலும் எனக்கேதும் தருவார் இல்லை. ஆனால் யார் உனக்குக் கொடுத்தாலும் நீ சாப்பிடுறதே இல்லை' என்று எழுதியிருப்பார்.
2வது சரணத்தில் கொஞ்சம் கொஞ்சமா கடவுளைக் கீழே கொண்டு போய் தன்னை உயர்த்திப் பாடுவார். 'பணம் காசு தன்னைத் தந்து வீட்டை எடுத்தார். பால் போல உனக்குத் தந்து கண்ணை மறைத்தார்'. உன்னையும், என்னையும் ஏமாற்றிட்டான்னு அழகா வரிகளில் சொல்லி இருந்தார். கதைப்படி இது டிஆர்.மகாலிங்கத்துக்கு நடக்கக்கூடியது. ஆனா பின்னால அது கண்ணதாசனுக்கு நடந்தது. கவலை இல்லாத மனிதன் படம் எடுத்து பெரிய அளவில் நட்டத்துக்கு ஆளாகிறார்.

அப்புறம் வீடு ஜப்தி ஆகுது. அந்தப் படத்துக்குப் பிறகு பாவமன்னிப்பு படத்துக்குப் பாடல் எழுதுகிறார். 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்ற பாடல். இது கண்ணதாசனின் வீடு ஜப்தி பண்ணிய பிறகு எழுதப்பட்ட பாடல். படத்துல ஒரு நாயகனுக்காக பாடல் எழுதுகிறார் கண்ணதாசன். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சி அது அவருக்கே நடக்குது. கடைசியில் அந்தப் பாடலில் கடவுளை விட நான் பெரியவன். என்னால் நடமாட முடியும். உன்னால் நடமாட முடியாது என்றும் சொல்லி இருப்பார் கவியரசர்.
1960ல் கண்ணதாசன் தயாரிக்க கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் கவலை இல்லாத மனிதன். சந்திரபாபு, எம்ஆர்.ராதா, டிஎஸ்.பாலையா, டிஆர்.மகாலிங்கம் உள்பட பலர் நடித்துள்ளனர்.