நான் கேட்டவுடனே சம்பளத்தை யாரும் தூக்கி கொடுத்துட மாட்டாங்க!.. அந்த கேள்வியால் டென்ஷனான கவின்!..

இதுவரை மூன்று படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கும் நிலையில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

டாடா திரைப்படம் தவினுக்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், திடீரென தனது சம்பளத்தை அவர் பல கோடிகளுக்கு உயர்த்தி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அது தொடர்பான கேள்வியை பத்திரிகையாளர்கள் இன்று நடைபெற்ற ஸ்டார் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எழுப்ப அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: கண்டெய்னர் ஃபுல்லா பணம்!.. தனுஷின் குபேரா படத்தின் கதை இதுதானா?.. லீக் பண்ண போஸ்டர்?..

கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் போது முதலில் தனக்கு ₹1000 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது என்றும் அந்த தொடர் முடியும் போது தன்னுடைய சம்பளம் 6000 ரூபாயாக உயர்ந்தது எனக் கூறினார். இதுவரை 4 படங்களில் நடித்துள்ளேன். படத்துக்கு படம் சம்பள உயர்வு என்பது அந்த படம் பெரும் லாபத்தை பொறுத்துதான் என்றும் சும்மா நான் போய் கேட்டால் எனக்காக எந்த தயாரிப்பாளரும் சம்பளத்தை உயர்த்தி தர மாட்டார்கள் எனக் கூறினார்.

மேலும், நீங்க ஒரு பத்திரிகையில் வேலை செய்கிறீர்கள், அந்த பத்திரிக்கையில் இருந்து இன்னொரு பத்திரிகைக்கு செல்லும்போது சம்பள உயர்வை எதிர்பார்ப்பீர்களா மாட்டீர்களா? என்கிற கேள்வியும் எழுப்பி கேள்வி கேட்டு பத்திரிகையாளரை மடக்கி விட்டார்.

இதையும் படிங்க: தாமரையை மலர வைக்கும் முயற்சியா இது? தயாராகப் போகும் அண்ணாமலை பயோபிக்.. ஹீரோ யார் தெரியுமா?

படம் என்பது விவாதத்திற்கு உரியது. அதை விவாதிக்கலாம். ஆனால் சம்பளம் என்பது விவாதத்திற்கு உரியதா என்று எனக்குத் தெரியவில்லை என்றும் தனது டென்ஷனை பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வெளிக்காட்டியுள்ளார் கவின்.

ஸ்டார் படம் நிறைவடைய கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு இடையே பலர் தன்னை அணுகி படம் பண்ண கேட்டார்கள். ஆனால் அவர்களுடன் தற்போது படம் பண்ண முடியாது என மறுத்துவிட்டேன். மேலும் என்னை விட சிறந்த நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களை வைத்து படம் பண்ணுங்கள் என்றும் கூறினேன் என கவின் பேசியுள்ளார். நடிகர்கள் தொடர்ந்து கோடிக் கணக்கில் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவதால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர் என்பதையும் இங்கே மறுக்க முடியாது.

இதையும் படிங்க: யார் சொல்லியும் கேட்காத அஜித் ஆதிக் சொல்லி கேட்டாரே! இதுதான் ஃபேன் பாய் சம்பவமா?

 

Related Articles

Next Story