More
Categories: Cinema News latest news

அவரை நம்பி போகாதீங்க.! உஷாராகிய மாஸ்டர் தயாரிப்பாளர்.! உண்மையில் மாஸ்டர் பிளான் தான்.!

மாஸ்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான தயாரிப்பாளராக மாறி உள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். அந்த படத்திற்கு பிறகு சியான் விக்ரமை வைத்து மகான் மற்றும் கோப்ரா எனும் இரண்டு திரைப்படங்களை தயாரித்து முடித்துள்ளார். அதில் மகான் திரைப்படம் வெளியாகி விட்டது.

லலித் குமார் அதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு அதிக வாய்ப்பு அளித்து அவரை பின்தொடர்ந்து வருகிறார் என்பது அவரது படங்களை பார்த்தாலே தெரியும். மாஸ்டர் படத்திற்கு முன்னரே 96 திரைப்படத்தை வெளியிடுவதில் மிகவும் உதவியாக இருந்தவர் லலித் குமார்.

Advertising
Advertising

அதன் பிறகு துக்ளக் தர்பார் எனும் திரைப்படத்தை தயாரித்தார். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் திரைபடத்தையும் தயாரித்து முடித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – இறந்து போன என் தம்பி மாதிரியே இவன் இருக்கான் ! மேடையில் கலங்கிய விமல்.!

இதனை தொடர்ந்து மேலும் ஒரு விஜய்சேதுபதி படத்தை தயாரிக்க லலித் குமார் திட்டமிட்டுள்ளாராம். இதனை குறிப்பிட்டு லலித்குமார் நண்பர்கள் ஒரு ஹீரோ பின்னாடி செல்ல வேண்டாம் அது சில நேரம் தவறாகிவிடும் என அறிவுறுத்தவே,

தற்போது ஜெயம் ரவியை தொடர்பு கொண்டு அவரை வைத்து தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

இதற்கு இடையில் மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் மீது விஜய்க்கு அதீத மரியாதை உண்டாம். ஏனென்றால் நீண்ட காலம் காத்திருந்து மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் கொண்டு வந்ததற்காக. அதனால் விஜய் மீண்டும் கால்ஷீட் தருவதாக கூறி இருந்தாராம். அதனை நம்பி லலித் குமாரும் விஜய்க்காக காத்திருக்கிறாராம்.

Published by
Manikandan

Recent Posts