vikram
தமிழ் சினிமாவில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது துருவ நட்சத்திரம் திரைப்படம்தான். 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் படம் இன்னும் ரிலீஸாகாமல் சில பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. இந்தப் படம் மட்டும் இல்லை. இதே போல் எத்தனையோ பல திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர்.
இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் விக்ரம் நடித்த திரைப்படம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே ஹைப் இருக்கிறது. இதை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கௌதம் மேனன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சூர்யாவாம். அதன் பிறகுதான் சில மாற்றங்களை செய்து விக்ரம் இந்தப் படத்திற்குள் நுழைந்திருக்கிறார்.
இந்த படம் சில பொருளாதார நெருக்கடியாலும் சட்ட ரீதியான பிரச்சினையாலும் சிக்கி வெளியாகாமல் இருந்திருக்கின்றது. இப்போதுதான் அந்தப் பிரச்சினையை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து வருகிறார்களாம்.இன்னும் சட்டரீதியான பிரச்சினை தான் இருக்கிறதாம். அதையும் இனி வரும் வாரங்களில் முடித்து விடுவார்களாம்.
இத்தனை வருடங்களில் இந்தப் படத்தை நான் கடந்து போயிருக்கலாம். ஆனால் இந்தப் படத்திற்காக நிறைய சவால்களை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இந்தப் படம் ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்த படங்களையும் இயக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆகி அதற்கான ரசிகர்களின் ரெஸ்பான்ஸை பார்க்கவே நான் விரும்புகிறேன் என கௌதம் மேனன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…
இன்ஸ்டாகிராம் மூலம்…
நடிகராக இருந்து…