பட்டாக்கத்தியை காட்டி சிமானை மிரட்டிய 5 இளைஞர்கள் கைது!

1096a0eaa641696409683a42961f5e71

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு டிக்டாக் செயலியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ மூலம் பட்டா கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் சீமானுக்கு பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த டிக்டாக் வீடியோ பயங்கர வைரல் ஆன நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அந்த ஐந்து இளைஞர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்

சீமானுக்கு மிரட்டல் விடுத்தது ஏன்? அவர்களின் பின்னணியில் யாராவது இருக்கின்றார்களா? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது. டிக் டாக் மூலம் தங்களுடைய திறமைகளை ஒருசிலர் காண்பித்து வந்தாலும், இன்னும் சிலர் இதுபோல் தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதும் ஆபாச பதிவுகளை பதிவு செய்து வருவதுமாக இருப்பதால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story