தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு ஏராளமான படங்களில் நடித்து தன்னை தானே தரம் தாழ்த்தி மக்களை மகிழ்விப்பதில் சிறந்தவர். இன்னும் இவரின் காலி இடத்தை நிரப்ப ஒருவரும் வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஆனால், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்தால் அப்படத்திலிருந்து வடிவேலு விலக, இதனால் பல கோடிகள் நஷ்டம் என அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க, வடிவேலு படங்களில் நடிக்க ரெட் கார்ட் போட்டனர். இதனால் கடந்த பல வருடங்களாகவே படங்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் இவரது மீம்ஸ் தான் முழு நேர பொழுதுபோக்காக இருந்து வருகிறது. வெள்ளித்திரையில் வடிவேலுவை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சிலநாட்களுக்கு முன்பு, வடிவேல் வெப் சீரியஸில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதுபற்றி கேட்டால் விரைவில் நல்ல செய்தி வரும் என்று மட்டும் வடிவேலு கூறிவந்தார். தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உருவாக்கியுள்ள ஆஹா (Aha) ஆப்பில் இந்த வெப் சீரியஸ் வெளியாகவுள்ளதாக செய்திகள் கசிந்தது..
இந்நிலையில், அலெக்ஸ் பாண்டியன், தலை நகரம், கத்தி சண்டை, படிக்காதவன் ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய வெப் சீரியஸில் வடிவேலு நடிக்கவுள்ளாராம். இந்த வெப் சீரிஸ் ஜீ5 (zee5) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Balachander: தமிழ்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…