அட்லிக்கு தரமான சம்பவம் செய்த ஏஜிஎஸ் நிறுவனம்....!

db750753afa77ff903846f7144942ca2

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக ஒரு பக்கம் சினிமா டிராக்காரர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தயாரிப்பு தரப்பிலிருந்து இந்த படம் மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்படுவதாகும் ஒரு செய்தி கூறுகின்றது. உண்மையில் பிகில் திரைப்படம் வெற்றியா? தோல்வியா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது

இந்த நிலையில் பிகில் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் அட்லி, ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை ஒன்று சம்பளம் பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அந்த படம் டிராப் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது

அட்லீ குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்திடம் ஷாருக்கான் தரப்பு விசாரித்ததாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் அட்லீ குறித்து ஒரு மோசமான ரிப்போர்ட்டை கொடுத்ததால் ஷாருக்கான், அட்லி படத்தின் திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அட்லியினால் தங்களுக்கு பணக்கஷ்டம் இருந்தால் கூட பரவாயில்லை அதை நாங்கள் சமாளித்து விடுவோம், ஆனால் அவர் கொடுத்த மன உளைச்சல் தான் எங்களால் தாங்க முடியாததாக இருந்ததாக ரிப்போர்ட் ஒன்ரை ஷாருக்கானுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது

நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய அட்லி குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை எடுக்க தெரியாதவர் என்ற குற்றச்சாட்டு மட்டுமின்றி தற்போது தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்கும் இயக்குனர் என்ற பெயரையும் எடுத்துள்ளதால் அட்லியின் அடுத்த படம் உருவாகுமா? என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது

 

Related Articles

Next Story