More

அழாதீங்க தாத்தா நீங்களும் சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிடுவீங்க –  ஆறுதல் கூறிய ஐஸ்வர்யா ராய் மகள்!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக ஜொலிக்கும் அமிதாப் பச்சன்  குடும்பத்தில் ஜெயா பச்சனை தவிர அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். முதலில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தார்.

Advertising
Advertising

தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா என ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்களது குடுப்பதில் அனைவரும் குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு யாகம் செய்தனர்.

ரசிகர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் மகள் ஆராத்யா இருவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு நேற்று வீடு திரும்பினர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது தாத்தா அமிதாப் பச்சனை கட்டிப்பிடித்து அழாதீங்க தாத்தா, நீங்களும் விரைவில் குணமாகி வீடு திரும்புவீர்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு சென்றதாக அமிதாப் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், பேத்தியும் ,மருமகளும்  குணமாகி வீடு திரும்பியதை பார்த்து அமிதாப் ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளார்

Published by
adminram

Recent Posts