நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அமைதியாக எதையோ நோக்கி காத்திருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நடிகை ஆண்ட்ரியா, ” இந்த வருடம் எப்போது முடியும் என்று காத்திருக்கிறேன்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் கொரோனா, புயல் , லாக்டவுன் என ஒரு வருஷம் முழுக்க மக்களை முடக்கிவிட்டது.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…