More

மீண்டும் நிறுத்தப்படும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு – ஐயோ பாவம் ரசிகர்கள்…

இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதையடுத்து திரைத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத இருகைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

Advertising
Advertising

ஆந்திராவில் சிரஞ்சீவி, பவன் கல்யான் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். படப்பிடிப்பு குழுவினர் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அங்கு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வருகிறது. சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா, மகேஷ் பாபு நடிக்கும் ‘சர்க்காரு வாரி பாட்டா’, வெங்கடேஷ் நடிக்கும் ‘எப் 3’ ஆகிய பட்ங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினி சென்னை திரும்பினார். 3 மாதம் கழித்து சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது ஆந்திராவில் கொரோனா அதிகரித்து, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு என்னவாகும் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அனேகமாக மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Published by
adminram

Recent Posts