More

வாடகை கூட கொடுக்க முடியல!.. தேசியவிருது வாங்கியவருக்கு இந்த நிலைமையா?….

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் அப்புக்குட்டி. தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு அருகே ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Advertising
Advertising

அந்நேரத்தில்தான் இயக்குனர் சுசீந்திரன் கடவுள் போல வந்தார். வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் முக்கிய வேடம் கொடுத்தார். படம் முழுவதும் வரும் வேடம். இந்த படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

அதன்பின், அதே சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் ஹீரோ வேடம். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அப்புக்குட்டி சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். இப்படத்திற்காக தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.  ஆனால், சினிமா வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக வீரம் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருப்பார். அப்புக்குட்டியை அஜித்திற்கு மிகவும் பிடித்து விட அவரை அஜித்தே புகைப்படமெல்லாம் எடுத்து தள்ளினார். இது தொடர்பான புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது.

சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் தற்போது கோவூரில் வசித்து வருகிறார். அதுவும் வாடகை வீடுதான். தற்போது கொரோனா காலம் என்பதால் சரியான வாய்ப்புகள் இல்லமால், வாழ்க்கையை ஓட்ட முடியாமல் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறாராம். திரைத்துறையினர் யாரேனும் தனக்கு உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார். 

சினிமாவில் விருது வாங்குவது முக்கியமல்ல.. காசு சம்பாதிப்பதுதான் முக்கியம் போல இருக்கு!….

Published by
adminram

Recent Posts