More

உழைத்த எருதுக்கும் விளைத்த நிலத்திற்கும் நன்றி – வித்யாசமா பொங்கல் வாழ்த்து கூறிய அதுல்யா!

தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.

Advertising
Advertising

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது அதுல்யா அழகிய வெள்ளை நிற புடவையில் செம ட்ரடிஷனல் லுக்கில் பொங்கல் கொண்டாடிய அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு… 

“இந்த உலகிலேயே உணவளிக்கும் விவசாயத்திற்கு விழா நாள் குறித்த ஒப்பற்ற சமுதாயம் நம் தமிழர் சமுதாயம்! உழைத்த எருதுக்கும்… விளைத்த நிலத்திற்கும் நன்றி செய்யும் திருநாள்! இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!! என கேப்ஷன் கொடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த உடனே ரசிகர்கள்… அட நம்ம அதுல்யா ரவியா இது!! என ஒரு நிமிடம் திகழ்த்துவிட்டனர். 

 

Published by
adminram

Recent Posts