தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று துவங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பட்தால் ஆளுநர் பன்வாரிலால் உரை நிகழ்த்தினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசியன் செயல்பாட்டினை பாராட்டி பேசினார்.
குறிப்பாக முதல்வர் பழனிச்சாமி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி சமூக நீதியை நிலை நாட்டியுள்ளார். அவர் அறிவித்த அம்மா மினி கிளினிக் ஒரு சிறந்த திட்டம். அதற்காக அவரை பாராட்டுகிறேன். பழனிச்சாமி தலைமையில் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதற்காக அவரின் நிர்வாக திறனை பாராட்டுகிறேன். தமிழகம் சிறந்த நிர்வாக திறன் மிக்க மாநிலமாக மாறியுள்ளது. தமிழகம் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. முதல்வர் பழனிச்சாமியின் தலைமையில் சிறப்பாக செயல்படும் அனைத்து துறைகளுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்’ என பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…