More

பிரார்த்தனைக்கு கிடைத்த பலன்..எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை தகவல்

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. இறுதியாக அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் 5 நிமிடம் திரைத்துறையினர் மற்றும் உலகத்திலிருக்கும் அனைத்து எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின்  ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

Advertising
Advertising

தற்போது ரசிகர்கள் செய்த பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

Published by
adminram

Recent Posts