விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக பாடகி சுசித்ரா பங்கேற்றுள்ளார். இந்த ப்ரோமோவில் சுசித்ராவை பார்த்ததும் பலருக்கும் ஓவியாவை பார்ப்பது போல் உள்ளதாக கூறியுள்ளார். சுசித்ரா வீட்டில் வந்ததும் எல்லோரும் அதிர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அர்ச்சனா மட்டும் அதிர்ச்சியில் ஷாக் ரியாக்ஷன் கொடுத்தார்.
அதேபோல், எதையும் ஒபனாக, தவறுகளை சுட்டிக்காட்டி பேசும் ஆரியையும் அவருக்கு பிடிக்கவில்லை. கடந்த வாரம் பாலாஜி, அர்ச்சனா, ரியோ ஆகியோரின் செயல்பாடுகளை விமர்சித்து ஆரி பேசியிருந்தார். இதற்கு கமலும் பாராட்டு தெரிவித்திருந்தார். இது அர்ச்சனா, ரியோ, பாலாஜிக்கு பிடிக்கவில்லை.எனவே, இந்த வாரம் எவிக்ஷன் பரிந்துரையில் அவர்கள் அனைவரும் ஆரியை நாமினேட் செய்துள்ளனர்.
இந்நிலையில், சனம் ஷெட்டிக்கும், பாலாஜிக்கும் மீண்டும் முட்டிக்கொண்டது. 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றி நேற்று இரவு தன்னுடைய பின்புறத்தை நீ உதைத்தாய் என பாலாஜி கூற, வேண்டுமென்றால் நீயும் உதச்சிக்கோ’ என சனம் எகிற மற்றவர்கள் அவரை சமாதானம் செய்யும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…
பாரதிராஜாவால் தமிழில்…
தமிழ் சினிமாவில்…
இளையராஜா எவ்வளவு…