அஜய் தேவ்கான் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான மைதான் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை தசரா விடுமுறையை ஒட்டி அக்டோபர் 15-ம் தேதி வெளியிடுவது என போனி கபூர் 6 மாதங்களுக்கு முன்னரே முடிவெடுத்துவிட்டார். இந்தநிலையில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தை அக்டோபர் 13-ம் தேதி வெளியிடுவதாக எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவித்தார்.
இதுதான் போனி கபூரின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். `இரண்டு படங்களிலுமே அஜய் தேவ்கான் நடித்திருக்கிறார். என் படத்தை அக்டோபரில் வெளியிடுவதாக முன்னாடியே முடிவெடுத்துவிட்டேன். இப்படி இருக்கையில், தனது படத்தையும் அக்டோபரில் வெளியிடுவதாக ராஜமௌலி அறிவித்தது நியாயமே இல்லை. திரைத்துறையை காக்க இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று போனி கபூர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…