More

சித்தி சீரியலின் முக்கிய நடிகரை தூக்க வைத்த கொரோனா – வெளியான புகைப்படம்!

கொரோனா பாதிப்பு காரணமாக சித்தி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த நடிகர் பொன்வண்ணனுக்கு பதில் நிழல்கள் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுன் காரணமாக சீரியல்களின் படப்பிடிப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் சீரியல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அதை நம்பி வாழும் அடிமட்ட தொழிலாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வரை பாதிக்கப்பட்டனர். அதையடுத்து இப்போது 60 பேரை மட்டும் கொண்டு படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் சீரியல்களில் நடித்து வந்த பல நடிகர் நடிகைகள் சென்னையை விட்டு வெளிமாவட்டங்களிலோ அல்லது வேறு மாநிலங்களிலோ சிக்கியுள்ளதால் பலர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் பல நடிகர்களை நீக்கிவிட்டு புதிய நடிகர்களை நடிக்க வைக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் பொன்வண்ணனுக்குப் பதில் தற்போது நிழல்கள் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். இதை அந்த தொடரின் நாயகியான ராதிகா சரத்குமார் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். இது போல மேலும் பல தொடர்களிலும் நடிகர்கள் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் அவர் ’உடல்நலம் காரணமாக சில நடிகர்களுக்கு பதில் வேறு நடிகர்கள் நடிக்க உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts