விஜய் 65 படத்துக்காக முருகதாஸ் சொன்ன கதையில் பல மாற்றங்களை நடிகர் விஜய் சொல்லியுள்ளதாக செய்திகள் சொல்லப்படுகிறது.
விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த அறிவிப்பும் இல்லை.
இதற்குக் காரணம் விஜய்தான் என சொல்லப்படுகிறது. விஜய்யிடம் ஏஆர் முருகதாஸ் கூறிய கதையின் முதல் பாதி விஜய்க்கு பிடித்த இருந்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி அவருக்கு திருப்தி இல்லை என்றும் அதில் பல கரெச்க்ஷன்களை சொல்லி சரிசெய்து கொண்டு வருமாறு அனுப்பியுள்ளாராம். இதனால் மீதிக் கதையையும் அவர் சொல்லி அது ஓகே ஆனபின்னர் அறிவிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம் என சன் பிக்சர்ஸிடம் சொல்லி விட்டாராம்.
விஜய்க்கு மூன்று ஹிட் படங்களைக் கொடுத்த முருகதாஸிடமே கதை விஷயத்தில் விஜய் இவ்வளவு கறாராக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதெற்கெல்லாம் காரணம் கடைசியாக முருகதாஸ் இயக்கி அட்டர் பிளாப் அன தர்பார் படம்தான் காரணம் என சொல்லப்படுகிறது.
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…