சாதிரீதிய பாகுபாட்டை தோலுரித்து காட்டிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். அடுத்து தனுஷை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் ‘கர்ணன்’.
இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நேர்மறையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்தது. அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறினர். கூறியது போலவே கர்ணன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்துள்ளது.
இந்நிலையில், தனுஷ் – மாரிசெல்வராஜ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…