சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வீடியோ!.. பிரபல திவ்யா கள்ளச்சி கைது!..

by சிவா |
சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வீடியோ!.. பிரபல திவ்யா கள்ளச்சி கைது!..
X

Divya kallachi: டிக்டிக் ஆப்பை பலரும் பயன்படுத்திய போது அதில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் பல யுக்திகளை கையாண்டனர். ஜிபி முத்து போன்றவர்கள் சினிமா பாடல் காட்சிகளுக்கு நடித்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர். ரவுடி பேபி என ஒருவர் வந்தார். அசிங்கமாக உடைகளை அணிந்து நடனமாடி வீடியோ வெளியிட்டார்.

ஜிபி முத்துவும், அவரும் இணைந்தும் வீடியோ போட்டார்கள். அதன்பின் அவர்கள் இருவரும் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் திட்டி வீடியோ வெளியிட்டு டிக்டாக்கில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இவர்கள் இல்லாமல் பல பெண்கள் ஆபாசமாக பல விஷயங்களையும் செய்தார்கள்.

இதில், ரவுடி பேபி திருச்சி அருகே பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், வேறு சில வழக்குகளிலும் சிக்கி சில மாதங்கள் சிறையில் இருந்தார். அவரை போலவே கார்த்திக் என்கிற நபர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சொல்லி பிரபலமானவர்தான் திவ்யா. கார்த்திக் மாமா ஐ லவ் யூ.. கார்த்திக் நீ எங்கடா இருக்க?.. என டிக்டாக்கில் வைப் ஏற்றியவர் இவர்.

பின்னாளில் அப்படி யாருமே இல்லை. பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன் என சொன்னார். டிக்டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் திவ்யா கள்ளச்சி என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம், யுடியூப் ஆகியவற்றில் வீடியோ வெளியிட்டு வந்தார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில்தான், சமூக ஆர்வலர் ஒருவர் திவ்யா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். குழந்தைகளை வீட்டில் அடைத்துவிட்டு அவர்களை பாலியல்ரீதியாக பயன்படுத்தி வீடியோ எடுத்து சம்பாதித்து வருகிறார் என்கிற பகீர் தகவல் அதில் சொல்லப்பட்டிருந்தது. அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறிப்பதகவும் சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை துவங்கிய விருதுநகர் போலீசார் திவ்யா மற்றும் இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளார்.

இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தன் மீது எந்த தவறும் இல்லை. பொய்யாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லியிருக்கிறார் திவ்யா. ரவுடி பேபிக்குபின் திவ்யா கள்ளச்சியும் சிறைக்கு போவது உறுதியாகியுள்ளது.

Next Story