நடிகர் சுசீந்திரன் நடிகர் ஜெய்யை வைத்து ஊரடங்கு சமயத்திலும் ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார். இப்படத்தில் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் அவதாரத்தையும் ஜெய் எடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவா குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். எனவே, இசை என்பது அவர்கள் ரத்தத்திலேயே கலந்ததுதான். ஆனால், நடிப்பதை தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்டாத ஜெய்யை சுசீந்திரன் இசையமைப்பாளராக மாற்றியுள்ளார்.
மாநாடு திரைப்படத்திற்கு முன் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இப்படத்திற்கும் நடிகர் ஜெய் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக செய்தி கசிந்துள்ளது. சிம்பு சம்மதம் தெரிவித்தால் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கும் அவரே இசையமைப்பாளராக நியமிக்கலாம் என சுசீந்திரன் யோசித்து வருகிறாராம்.
ஆனால், சிம்புவுக்கு யுவன் சங்கர் ராஜேவே எப்போதும் பிடித்த இசையமைப்பாளார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
இளையராஜாவின் இசை…
நடிகை கீர்த்தி…
சாமானிய மக்களை…
விஷாலின் புதிய…
Coolie Movie:…