ஒரு திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே ஓடிடியில் என்ன விலை என பேசிவிடுவார்கள். பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படம் என்றால் ஒரு விலை, சிறிய நடிகர்கள் என்றால் ஒரு விலை என டிடி மற்றும் ஓடிடி நிறுவனங்கள் விலை பேசி வருகின்றனர்.
அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி நிறுவனங்களிடம் டீல் பேசி விட விற்பனை செய்துவிட வேண்டும். படம் வெளியாகி ரிசல்ட் சரியில்லை எனில், அப்படம் அடி மாட்டு விலைக்குதான் போகும். அதுதான் சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்கும் நடந்துள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இப்படம் வெளியாவதற்கு முன் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியது. ஆனால், அதிக விலைக்கு டீல் பேச அவைகள் ஒதுங்கிவிட்டன. படம் வெளியாகட்டும் நம்மை தேடி வருவார்கள் என தயாரிப்பு நிறுவனம் காத்திருக்க, ரிலீஸுக்கு பின் ரிசல்ட் தெரிவிந்துவிட்டது.
ஆனால், சாட்டிலைட் விலையை ரூ.10 கோடி என தயாரிப்பு நிறுவனம் விலை பேச எந்த டிவியும் வரவில்லை. தற்போது ஈஸ்வரன் படத்தில் சாட்டிலைட் உரிமையை வேறு வழியில்லாமல் விஜய் டிவியிடம் ரூ.3 கோடிக்கு விற்பனை செய்துள்ளனராம்.
விஜய் டிவின்னா திரும்ப திரும்ப போட்டு சாவடிப்பார்களே!…..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…