விளையாட்டு விபரீதமானது – 2 மணிநேரப்போராட்டத்துக்கு சிறுவன் மீட்பு !

b023db0a8b93f79c2318d3f4e17eb476-3

செங்குன்றம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுவருக்கும் தூணுக்கும் இடையில் மாட்டிக் கொண்டதால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.

செங்குன்றம் பகுதியில் உள்ள உள்ள முண்டி அம்மன் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். அவரது மகன் நித்திஷ் .12 வயதாகும் நித்தீஷ், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தன்னுடைய வீட்டில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது, கேட் அருகே உள்ள சுவருக்கும் இடையில் நுழைந்து செல்லும் முற்பட்டுள்ளார்.

ஆனால் அவரது உடல் சுவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டுள்ளது. எவ்வளவோ முயன்றும் அவரால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. இதனால் அவர், கத்திக் கூப்பாடு போட்டு உள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் அவரை மீட்க முயற்சிக்க அவர்களாலும் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. விரைந்து வந்த அவர்கள் தூணின் சில பகுதிகளை உடைத்தும், நித்திஷின் ஆடைகளை கத்திரிக்கோலால் அறுத்தும் அவரை மீட்க போராடினர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிதிஷ் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார்.

 

Related Articles

Next Story