கங்குலி சொல்லும் சூப்பர் சீரிஸ் – மற்ற நாடுகள் எதிர்ப்பு !

b470624bb398b1bb30920682e8ae728c

பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்திய இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணியோடு ஒருங்கிணைக்க இருக்கும் சூப்பர் சீரிஸுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்கள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் டாப்பில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு அணியை இணைத்து சூப்பர் சீரிஸ் எனும் தொடரை நடத்தவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதற்கு இங்கிலாந்து ஒத்துக்கொண்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

ஆனால் இது சம்மந்தமாக மற்ற நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஐசிசியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வாரியங்கள் ஆதிக்கம் செலுத்தும் வரும் நிலையில் இது போன்ற தொடர் மற்ற நாட்டு அணிகளை மேலும் வலுவிழக்க வைக்கும் எனக் கருத்துகள் சொல்லப்படுகின்றன.

 

Related Articles

Latest News

Next Story