More

ஹெச்.ராஜா வுக்கு பைத்தியம் முத்திவிட்டது – கடுமையாக விமர்சித்த குஷ்பு

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. பல மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் பல இடங்களில் நடந்த மோதலால் வன்முறை கையில் எடுக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் போலீசாரே வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில்,ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த ஹெச்.ராஜா ‘குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்ற வாதங்கள் அனைத்தும் அரசியல் காரணத்திற்காக பரப்பப்படும் பொய் பிரச்சாரம்’ எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு ‘ ஹெச். ராஜாவுக்கு தீவிர பித்துப்பிடித்துவிட்டது. நல்ல அறிவுள்ள யாரும் அவர் போல் பேசமாட்டார்கள். பாஜகவிலிருந்து அவரை மீட்டு புகலிடம் கொடுங்கள்’ எனப்பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts