More

சிம்புவை மிரட்டிதான் நடிக்க வைத்தேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் !

சிம்பு நடித்த சரவணா படத்தை இயக்கிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தான் எப்படி அவரை நடிக்க வைத்தேன் என பதிலளித்துள்ளார்.

Advertising
Advertising

சிம்பு ஷூட்டிங்குக்கு ஒழுங்காக வருவதில்லை, அதனால் எங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் என பல தயாரிப்பாளர்கள் இப்போது புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் சிம்பு ஆரம்பத்தில் இருந்தே இப்படிதானா இல்லை இப்போதுதான் இது குழப்பங்களை ஏற்படுத்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சிம்புவை வைத்து சரவணா என்ற படத்தை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘சரவணா படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்பு இரண்டு நாட்கள் லேட்டாக வந்தார். நான் அவரை அழைத்து நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றேன்.’அவர் பதறிப்போய் என்ன ஆனது? என்றார். நான் பிஸியாக படங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறேன். ஒரு கேப்பில் இந்த படம் பண்ணுகிறேன். படத்தை சீக்கிரமா முடிச்சாதான் தயாரிப்பாளருக்கு லாபம். நீ இப்படி லேட்டா வந்தா எப்படி படத்த முடிக்க முடியும். ஒன்னு லேட்டாகும்னா முதல்நாளே என்கிட்ட எத்தனை மணிக்கு வருவேன்னு சொல்லிட்டு போ. அதுக்கேத்த மாதிரி நான் ப்ளான் பண்ணி ஷூட் பண்ணுவேன் என அவரிடம் கூறினே.ன் 

அதன் பிறகு  அடுத்த நாட்களில் இருந்து சொல்லும் நேரத்துக்கு அவர் சரியாக வர ஆரம்பித்தார்.’ எனக் கூறினார்.

Published by
adminram

Recent Posts