More

எனக்கு நேரம் இல்ல.. விஜய் சொன்னத எப்படி வேணாம் புரிஞ்சுக்குங்க.. தெறித்து ஓடிய எஸ்.ஏ.சி.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் தந்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தார்.ஆனால், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று செய்தியாளரை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை என தெரிவித்தார். மேலும், விஜய் கூறியதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள். நான் என்ன நோக்கத்தில் கட்சியை பதிவு செய்தேன் என்பதை தனித்தனியாக என்னை பேட்டி எடுங்கள். அப்போது சொல்கிறேன். நல்லது நடக்க வேண்டும் என கருதியே கட்சியை துவங்கினேன் என அவர் கூற, யாருக்கு நல்லது? என செய்தியாளர்கள் கேட்க, இத்தனை மைக்குகள் முன்பு பேசி எனக்கு பழக்கமில்லை எனகூறி கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் எஸ்.ஏ.சி.

Published by
adminram

Recent Posts