More

இனிமே இந்த ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணனும் – கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

கொரோனா பின்னுக்கு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சில விதிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் நடக்க இருந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தற்போது நடந்து முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டதால் 4000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்து கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது வீரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவையாவன:-

  • நடுவர்களும் வீரர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.
  • அம்பயர்களிடம் தொப்பி, கண்ணாடி, துண்டு ஆகியவற்றை வீரர்கள் இனிமேல் தரக்கூடாது. சக வீரர்களிடமும் அவற்றைத் தர தடை செய்யப்படுகிறது.
  • நடுவர்கள் கையுறைகளைப் அணியவேண்டும்.
  • பயிற்சியின்போது சமூக இடைவெளியை வீரர்கள் பின்பற்றவேண்டும். இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும்.
  • உடலோடு உரசி
    வெற்றியைக் கொண்டாடும் விதத்தை வீரர்கள் தவிர்க்க வேண்டும்.
  • தண்ணீர், குளிர்பான பாட்டில்கள், துண்டு மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் ஆகியவற்றை வீரர்கள் சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
  • பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்தாமல் வியர்வையைப் பயன்படுத்தி பந்தை பளபளக்கச் செய்யலாம்.
  • பந்தைத் தொட்ட பிறகு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பந்தைத் தொட்ட வீரர்கள் அவரவர் மூக்கு, கண்கள், வாய் ஆகிய உறுப்புகளைத் தொடக் கூடாது.
  • விளையாட்டில் பங்கும் வீரர் யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வைரஸ் தொற்று உறுதியானாலோ உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
  • இதையடுத்து இரு அணி வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Published by
adminram

Recent Posts