More

நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்.. பிராத்தனையை தொடருங்கள் – எஸ் பி சரண் வேண்டுகோள்!

பிரபல பாடகர் எஸ் பி பி யின் உடல்நிலை இப்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் எஸ் பி சரண் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சீராக இருந்த அவரது உடல்நிலை திடீரென ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்காக திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட்டுப் பிராத்தனை செய்து வந்தனர். இதையடுத்து கடந்த இரு

நாட்களாக அவர் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் ‘அப்பாவின் நுரையீரல் செயல்பாடு கடந்த இரு தினங்களை விட இப்போது முன்னேற்றம் கண்டுள்ளது. மெதுவாக ஆரோக்கியத்தை நோக்கி மெதுவாக முன்னேறி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். உங்கள் பிரார்த்தனைகள், அக்கறை, அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து என் தந்தைக்காக பிராத்தனை செய்யுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts